Thursday 17 April 2014

கோயில்களில் தரும் கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள்

கோயில்களில் தரும் கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் 



காசி, திருப்பதி  போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில்  சிவப்பு, மஞ்சள் கயிறுகையில்  கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு  கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள்.  அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள்  மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி  ஆற்றிலோ பிற  நீர்நிலைகளிலோ  போட்டு விட வேண்டும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer